Theme Check

குளிரூட்டும் ஏசி ஜூலை 1 முதல் கொதிக்கப்போகுது.. ஏன் தெரியுமா..?

குளிரூட்டும் ஏசி ஜூலை 1 முதல் கொதிக்கப்போகுது.. ஏன் தெரியுமா..?

குளிரூட்டும் ஏசி ஜூலை 1 முதல் கொதிக்கப்போகுது.. ஏன் தெரியுமா..?
X

வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் ஏசி விலை உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எரிசக்தி மதிப்பீட்டு சட்டத்தின் கீழ் இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஆற்றலை மதிப்பிடும் அரசின் அமைப்பு (BEE) ஏப்ரல் 19-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், ‘ஜூலை 1, 2021 முதல் ஏசிகளுக்கான எனர்ஜி ரேட்டிங் விதி மாற்றி அமைக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய தரநிலை ஜனவரி 2022 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உற்பத்தியாளரின் வேண்டுகோளின் பேரில், அரசு ஆறு மாத கால அவகாசம் வழங்கியது.

தற்போது, அந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக ஏசிகளின் விலைகள் உயரும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய ஆற்றல் திறன் மதிப்பீட்டு விதிமுறைகளின்படி தற்போதைய ஏர் கண்டிஷனரின் ஆற்றல் மதிப்பீடு ஒரு நட்சத்திரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அதாவது, ஜூலை 1-ம் தேதி முதல் 5 நட்சத்திர ஏசியின் மதிப்பீடு 4 நட்சத்திர மதிப்பீடாக இருக்கும்.

இதன் காரணமாக 5 நட்சத்திர மதிப்பீடு இயந்திரங்களுக்கான வரையறை மேலும் வலுப்படுத்தப்படும். புதிய எரிசக்தி திறன் வழிகாட்டுதல்களின் விளைவாக, இந்தியாவில் ஏசியின் விலை 7 முதல் 10 சதவீதம் வரை உயரும் என ‘எகனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இது குறித்து நிறுவனங்கள் எந்த விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. வரும் மாதங்களில் இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஏசி விலை உயர்வது உறுதியாகியுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஏசி உற்பத்தியாளர் தங்கள் தயாரிப்பு தரத்தில் மாற்றத்தைச் செய்ய வேண்டும். ஆற்றல் அல்லது சக்தியை சேமிக்க அரசு எடுத்திருக்கும் ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

பழைய மாடலை விட, புதிய மாடல் ஏசிகளுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படும். புதிய விதிகளின் நடைமுறை ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Next Story
Share it