க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் : மாலை 4 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்
உடல் நலக்குறைவால் உயிரிழந்த அன்பழகனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை 4 மணிக்கு அன்பழகனின் இறுதி ஊர்வலம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிகக்கு ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவால் உயிரிழந்த அன்பழகனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை 4 மணிக்கு அன்பழகனின் இறுதி ஊர்வலம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கி, இறுதி ஊர்வலம் வேலங்காடு மயானத்தை அடையும். அங்கு மாலை 4:45 மணி அளவில் அடக்கம் செய்யப்படும் என்று திமுக எம்.எல்.ஏ. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
newstm.in
Tags:
Next Story

