மருத்துவர்களின் மனிதாபிமானமற்ற செயல் - சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஷீர் கன்ச்சை சேர்ந்த ஷஃபீக் உன்னிசா என்ற கர்ப்பிணி உடல்நலம் பாதிக்கப்பட்டு பரைச் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் விதிமுறைகளை காரணம் காட்டி அவரை மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை அலைக்கழித்துள்ளனர்.

மருத்துவர்களின் மனிதாபிமானமற்ற செயல் - சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்!
X

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஷீர் கன்ச்சை சேர்ந்த ஷஃபீக் உன்னிசா என்ற கர்ப்பிணி உடல்நலம் பாதிக்கப்பட்டு பரைச் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் விதிமுறைகளை காரணம் காட்டி அவரை மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை அலைக்கழித்துள்ளனர்.


இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது. துடிதுடித்துப்போன அவர், தெருவோரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த கொடூரச்செயலுக்கு பலரும் தங்களது கண்டனைத்தை பதிவு செய்தனர்.


அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவர்கள், செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it