Theme Check

ஒருநாள் இரவு மனைவியை கேட்ட அதிகாரி.. விரக்தியில் தீக்குளித்த லைன்மேன்..!

ஒருநாள் இரவு மனைவியை கேட்ட அதிகாரி.. விரக்தியில் தீக்குளித்த லைன்மேன்..!

ஒருநாள் இரவு மனைவியை கேட்ட அதிகாரி.. விரக்தியில் தீக்குளித்த லைன்மேன்..!
X

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லியா துணை மின்நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தவர் கோகுல் பிரசாத் (42). சமீபத்தில் இவர், அலிகஞ்சு பகுதிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

அது அவருக்கு வசதியாக இல்லாததால், மீண்டும் பல்லியாவுக்கு இடமாற்றம் செய்யுமாறு தனது மேலதிகாரியான இளநிலை இன்ஜினீயர் நாகேந்திர சர்மாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கோகுலிடம் நாகேந்திர சர்மா கேட்டார். அத்துடன், கோகுலின் மனைவியை ஒரு நாள் இரவு முழுவதும் தனது வீட்டுக்கு அனுப்புமாறும் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த கோகுல், பல்லியாவில் உள்ள நாகேந்திர சர்மாவின் வீட்டின் முன்பு கடந்த 9-ம் தேதி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Video before self-immolation: JE was making such a demand in lieu of  transfer, the lineman gave his life due to shame – PressWire18
இந்த சம்பவம் தொடர்பாக அவர் ஏற்கனவே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது, மாநிலம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர், மின்வாரிய ஊழியர் கொலைக்கு காரணமான அதிகாரி நாகேந்திர சர்மாவையும், மற்றொரு லைன்மேனான ஜகத்பால் என்பவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story
Share it