Theme Check

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோரை கோடரியால் வெட்டிக் கொன்ற மகன்!!

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோரை கோடரியால் வெட்டிக் கொன்ற மகன்!!

தூங்கிக் கொண்டிருந்த பெற்றோரை கோடரியால் வெட்டிக் கொன்ற மகன்!!
X

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் போதைக்கு அடிமையாகியிருந்தார். சிறுவனை எப்படியாவது போதை பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என நினைத்த பெற்றோர் அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

அங்கு அச்சிறுவன் சில நாட்கள் இருந்துவிட்டு கிராமத்திற்கு வந்துள்ளார். பெற்றோர் தன்னை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியதால் அவர்கள் மீது கோபத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் தன்னை அங்கு அனுப்பிவைத்து விடுவோர்களோ என நினைத்துப் பெற்றோரைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து இரவு வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த பெற்றோரை கோடரியால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்தார்.

Murder

இதை தடுக்க முயன்ற சகோதரனையும் அந்தச் சிறுவன் தாக்கியுள்ளார். பிறகு கோடரியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த அச்சிறுவன் பெற்றோரைக் கொலை செய்துவிட்டதாக கிராம மக்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it