வாத்தை பிடிக்க முயலும் புலி... புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து!! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ
வாத்தை பிடிக்க முயலும் புலி... புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து!! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், சிறிய நீர்தேக்கத்தில் நீந்திசெல்லும் வாத்தை பிடிக்க புலி ஒன்று முயல்வதும், அந்த புலியிடம் அகப்படாமல் இருக்க தண்ணீருக்குள் மூழ்கி வாத்து தப்பி செல்வதும் பதிவாகியுள்ளது.
வியாபாரத்தில் விரைந்து முடிவெடுத்து செயலாற்றக்கூடிய சிறிய நிறுவனமாக இருப்பதின் பயன் இதுதான் என்றும் இதனால் தான் புது வர்த்தக வாய்ப்புகளை அடைவதற்காக சிறிய நிறுவனங்களை கைப்பற்றுவதில் பெரு நிறுவனங்கள் அக்கறை காட்டுவதாகவும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
This explains—better than any management lecture—the advantages in business of being small, nimble and quick-witted. That’s why large companies need to carve out startup teams & startup cultures within themselves in order to pursue new opportunities. pic.twitter.com/x7VfWO9XZ7
— anand mahindra (@anandmahindra) June 30, 2021

