ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று தொடங்கியது! 47 நகரங்களில் பயணிக்கிறது!
ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று தொடங்கியது! 47 நகரங்களில் பயணிக்கிறது!

உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக்ஸ் போட்டி டோக்கியோவில் இன்று தீப ஓட்டத்துடன் தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி கடந்த 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. கடந்த வருடம் ஜூலை மாத இறுதியில் துவங்க இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பினால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று தொடங்கியது. இந்த தீப ஓட்டம் ஜப்பான் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது. ஜப்பானின் புகுஷிமா மாநகரில் துவங்கிய தீப ஓட்டம், ஜப்பானின் முக்கியமான 47 நகரங்கள் வழியே பயணிக்க இருக்கிறது.
Tags:
Next Story

