முறைமாமனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! கண்ணை மறைத்த கள்ளக்காதல்!!
முறைமாமனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! கண்ணை மறைத்த கள்ளக்காதல்!!

திருப்பத்தூர் அருகே முறை மாமனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் கணவரை கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரகுபதியூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (29) என்பவர் அதே பகுதியில் அழகுநிலையம் வைத்து வந்துள்ளார். இவருக்கு விசித்ரா (23) என்பவருடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மோனிஷ்(4) என்கிற மகனும், தன்ஷிகா( 2) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவி விசித்ராவின் அத்தை மகன் குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன்( 24) என்பவருடன் நண்பர்களாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவருக்குமிடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவரும் சேர்ந்து நவீன்குமார் வாயில் நுரையுடன் மயக்க நிலையில் இருக்கிறார் என கூறி நவீன் குமாரின் தந்தை முருகனிடம் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பொழுது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நவீன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பேரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நவீன்குமாரை அடக்கம் செய்தனர்.
இதனால், முருகன் தனது மருமகள் மீது உள்ள சந்தேகத்தின் பேரில் தொலைபேசியை ஆராய்ந்தபோது அதிக நேரம் சீனிவாசனுடன் விசித்ரா பேசியுள்ளது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து மருமகளான விசித்ரா தான் தனது மகன் கொலைக்கு காரணம் எனக்கூறி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் முருகன் மற்றும் உறவினர்கள் புகார் அளித்தனர்.
ஆனால், இதுவரை போலீசார் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியும் தனது மருமகளான விசித்திராவூம் அவருடைய அத்தை மகனான சீனிவாசனும் ஒன்றிணைந்துதான் மதுவில் விஷம் வைத்து தனது மகனை கொலை செய்திருக்க வேண்டும் எனக் கூறியும் புதைத்த நவீன்குமாரின் உடலை திரும்பவும் தோண்டி எடுத்து மறு கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், திருப்பத்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் மற்றும் திருப்பத்தூர் மருத்துவ அலுவலரிடம் கூறி மறு உடற்கூறாய்வு செய்யப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
newstm.in

