தாய்மாமன் மகனுடன் பேசிய பெண்! ஊரே பார்க்க அடித்து உதைத்து கொடுமைப் படுத்திய குடும்பத்தினர்! அதிர்ச்சி வீடியோ..!!
தாய்மாமன் மகனுடன் பேசிய பெண்! ஊரே பார்க்க அடித்து உதைத்து கொடுமைப் படுத்திய குடும்பத்தினர்! அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள், தங்கள் தாய்மாமனின் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதற்காக, ஆற்றங்கரையில் வைத்து அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
இந்த கொடூரமான வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
தாண்டா காவல் நிலைய அதிகாரியின் கூற்று படி, இந்த சம்பவம் கடந்த ஜூன் 22-ம் தேதி தார் மாவட்டத்தில் பிபால்வா கிராமத்தில் நடந்துள்ளது. ஆனால், இதன் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்ட பிறகே ஜூன் 25-ம் தேதி காவல்துறைக்கு தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட 19 மற்றும் 20 வயது பெண்கள், முதலில் புகாரை பதிவு செய்ய மிகவும் பயந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிறகு, அந்த பெண்களில் ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
பெண்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இரு பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
अलीराजपुर के बाद धार (MP) जिले के टांडा थाना के ग्राम पीपलवा में एक युवती को बेरहमी से लाठी डंडों से पीटा जा रहा है,@ChouhanShivraj यदि आपका ज़मीर ज़िंदा तो उम्मीद है आरोपियों पर कार्रवाई करने के बाद ही सोयेंगे,मामा राज में महिलाओं पर जुल्म जारी @sharmarekha आप भी महिला विरोधी? pic.twitter.com/5lDKuA6NTk
— Noori Khan (@NooriKhanINC) July 4, 2021

