பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்!!
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்!!

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வேன் என்று மிரட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (33) என்ற இளைஞர், தனது பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை காட்டி, பெண்ணின் மகளை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தபோது வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல் செல்வத்தின் செல்போனையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

