இனி வாரம் 2 மணி நேரம் போக்குவரத்து தடை!!
இனி வாரம் 2 மணி நேரம் போக்குவரத்து தடை!!

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியிலிருந்து 9 மணிவரை பொதுமக்கள் நடைபயணம், சைக்கிளிங், ஜாகிங் மேற்கொள்ள ஏதுவாக கிருஷ்ணகிரியில் போக்குவரத்து நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருப்பதை போல் நடைபயிற்சி, சைக்ள் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கான சிறப்பு திட்டத்தை காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி, ஒசூர் மாநகரில் முக்கியமான 5 இடங்களில் வாரம்தோறும் ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடைபயிற்சி மற்றும் சைக்கில் பயிற்சி மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 மணி நேர இடைவெளியில் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம் ஓசூரிலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

