பொள்ளாச்சியில் நடந்த சோகம்..!! ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!!
பொள்ளாச்சியில் நடந்த சோகம்..!! ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரது மனைவி சிவசக்தி. அழகு நிபுணராக வேலைபார்த்து வந்த இவர், திருமண நிகழ்விற்காக மணமகளுக்கு அலங்காரம் செய்வதற்காகப் ஈரோட்டிற்குப் பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது பல்லடத்தை தாண்டி பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் பின் இருக்கையிலிருந்த எழுந்த சிவசக்தி, எதிர்பாராத விதமாகப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியுள்ளார். பிறகு கீழே இறங்கி சென்று பார்த்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் சிவசக்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

