Theme Check

வங்கதேச பிரதமருக்கு அன்னாசி அனுப்புகிறார் திரிபுரா முதல்வர்..! : எதற்காக தெரியுமா..?

வங்கதேச பிரதமருக்கு அன்னாசி அனுப்புகிறார் திரிபுரா முதல்வர்..! : எதற்காக தெரியுமா..?

வங்கதேச பிரதமருக்கு அன்னாசி அனுப்புகிறார் திரிபுரா முதல்வர்..! : எதற்காக தெரியுமா..?
X

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் 650 கிலோ அன்னாசிப் பழங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய - வங்கதேச உறவின் அடையாளமாக 2,600 கிலோ வங்கதேச மாம்பழங்களை பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.

இந்தியாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தின் மூலமாக இந்த மாம்பழங்கள் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில், வங்கதேச பிரதமரின் இந்தப் பரிசுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தனது மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட 650 கிலோ அன்னாசிப் பழங்களை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தூதரகத்தின் மூலம் இந்த அன்னாசிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
Tags:
Next Story
Share it