உண்மையான இந்தியர்கள் பெட்ரோல் விலை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.. பாஜகவின் புது உருட்டு !!
உண்மையான இந்தியர்கள் பெட்ரோல் விலை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.. பாஜகவின் புது உருட்டு !!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டிவிட்டது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால்தான் உள்நாட்டு எரிபொருள் விலைகள் உயர்வுக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததாக இங்குள்ள பாஜக நிர்வாகிகள் கூறுவதும், பெட்ரோல், டீசல் விலையை உயர்வை எதிர்த்து பேசினால் 'ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் வாங்க யாரும் இல்லை அங்கு சென்று டேங்கை ஃபில் செய்துகொள்ளுங்கள்' என்றும் பாஜக கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கோமாளித்தனமாக பேசுவது மக்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், உண்மையான இந்தியர்கள் எரிபொருள் விலையை குறித்து கவலைப்பட மாட்டார்கள் என்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி டி. ரவி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் வெறுப்பை தூண்டியுள்ளது.
வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பாஜக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை உலக தரத்தில் உள்ளதாக வீடியோவில் பேசி அதை வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சி.டி. ரவி, காங்கிரஸ் ஆட்சியின்போது மக்களின் வரி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் வரி செலுத்துவோரின் பணம் உலகத்தரம் வாய்ந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை கட்டுவதற்கு செலவிடப்படுகிறது. உண்மையான இந்தியர்கள் எரிபொருள் விலை பற்றி கவலைப்படவில்லை, என இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
During the "Decade of Organized Loot" under Sonia Gandhi, taxpayers money was looted by CONgress through endless scams.
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) October 5, 2021
Under PM @narendramodi, taxpayers money is being spent on building World class roads & highways.
No wonder, true Indians are not concerned about fuel price. pic.twitter.com/zbHyDFrCRr
டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.64 ஆகவும் மும்பையில் ரூ. 108.67 ஆகவும் அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ. 103.36 ஆகவும், சென்னையில் லிட்டருக்கு ரூ .100.23 ஆகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலை கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ .94.17 ஆகவும், சென்னையில் லிட்டருக்கு ரூ .95.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in

