உஷார்! இந்த தவறை செய்தால் பி.எஃப். பணம் காணாமல் போய்விடும்!!
உஷார்! இந்த தவறை செய்தால் பி.எஃப். பணம் காணாமல் போய்விடும்!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) அமைப்பு அதன் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
பிஎஃப் தொடர்பான எந்தவொரு விவரங்களையும் யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பிஎஃப் விவரங்களைப் பகிர்ந்தால் ஆபத்து என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
அதேபோல, போன் கால் மூலமாக யாருக்கும் ஓடிபி போன்ற தகவல்களை கொடுக்க வேண்டாம் என்று பிஎஃப் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து பிஎஃப் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது.
#EPFO never asks its members to share their personal details like Aadhaar, PAN, UAN, Bank Account or OTP over phone or on social media.#EPFO कभी भी अपने सदस्यों से व्यक्तिगत विवरण जैसे आधार, पैन, यूएएन, बैंक खाता या ओटीपी फोन या सोशल मीडिया पर साझा करने के लिए नहीं कहता है। pic.twitter.com/4NhovLQ3xH
— EPFO (@socialepfo) January 29, 2022
அதில், பிஎஃப் அமைப்பு எப்போதுமே தனது உறுப்பினர்களிடம் ஆதார், பான், பிஎஃப் நம்பர், வங்கிக் கணக்கு எண், ஓடிபி போன்ற விவரங்களை மொபைல் அழைப்பு மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாகவோ கேட்கவே கேட்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
வாட்ஸ் ஆப், SMS போன்ற எந்தவொரு ஊடகம் வாயிலாகவும் பிஎஃப் தொடர்பான விவரங்களைப் பகிர்ந்தால் ஆபத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. பிஎஃப் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடுபோகலாம்.

சமீப காலங்களில் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி மோசடி கும்பல்களைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி போன்ற விவரங்களை வாங்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடிவிடுகின்றனர்.
இதேபோல, பிஎஃப் கணக்கில் உள்ள பணமும் திருடப்பட வாய்ப்புள்ளது. அதனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது.
newstm.in

