பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி !!
பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி !!

நடிகர் திலீப் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 1940-ல் தொடங்கி 2000-ன் முற்பகுதி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார். நடிப்பு மட்டுமில்லாமல், தயாரிப்பு, திரைக்கதை எழுத்து, என இந்தித் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர்.
2000 முதல் 2006 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இந்திய சினிமாவுக்கு இவரது சேவையைப் பாராட்டி 2015-ம் ஆண்டு 'பத்மவிபூஷன்' விருதை அளித்து இந்திய அரசு இவரை பெருமைப் படுத்தியுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஸான் ஈ இம்தியாஸ்' என்ற விருதை பாகிஸ்தான் அரசு 1998-ல் வழங்கி இவரை சிறப்பித்துள்ளது.
98 வயதாகும் நடிகர் திலீப் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் இவரது சகோதரர்கள் அஸ்லாம் கான் (88) மற்றும் இஷான் கான் (90) பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றும், நூறு ஆண்டுகளை கடந்தும் அவர் நலமுடன் வாழ வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

