அவர்கள் செய்ததை… பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி..!

அவர்கள் செய்ததை… பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி..!

அவர்கள் செய்ததை… பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி..!
X

தமிழக பாஜக தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு பிரதமரை தமிழக பாஜக வலியுறுத்தும்.

நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து மக்களிடம் எடுத்து வைக்கப்படும். நீட் தேர்வால் மருத்துவ படிப்புகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம்.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முறைப்படி கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்கிறது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தடுப்பூசி வினியோகம் செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி வினியோகம் செய்ய தனித்தனி முறை பின்பற்றப்படவில்லை.

மூத்த தலைவர்களை கலந்து ஆலோசித்து தமிழக பாஜக முக்கிய முடிவுகள் எடுக்கும். 37 வயதில் தமிழக பாஜக தலைவர் ஆகிய எனக்கு மூத்த தலைவர்கள் வழிகாட்டுவார்கள். பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பை மிகப்பெரிய ஒரு பொறுப்பாக கருதுகிறேன். இந்தப் பணியை நான் ஒழுங்காகச் செய்வேன்.

முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் பாஜகவை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் செய்த நல்ல விஷயத்தை இனி கூட்டாக எடுத்துச் செல்வேன். முன்னாள் மாநில தலைவர் முருகன் அவர்கள் கூறியபடி தமிழ்நாட்டில் உள்ள 11,000 கிராமத்திற்கு சென்று கட்சியை வளர்க்க ஏற்பாடு செய்வேன்” என்று தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it