Theme Check

விவசாயிகளுக்கு ரூ.2,000 எப்போது?

விவசாயிகளுக்கு ரூ.2,000 எப்போது?

விவசாயிகளுக்கு ரூ.2,000 எப்போது?
X

விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக பிரித்து தரப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் 11ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்று சுமார் 12 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

farmers

பொதுவாக, ஏப்ரல் - ஜூலை மாதங்களில் பிஎம் கிசான் தவணைப் பணம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கும் முன்னர் வெளியாகியிருந்த தகவலில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நிதியுதவி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் பணம் வரவில்லை.

farmers

இந்நிலையில், ராம நவமி அல்லது அம்பேத்கர் பிறந்த நாளன்று விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி அல்லது ஏப்ரல் 14ஆம் தேதி பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it