Theme Check

அடுத்த 6 பேர் விடுதலை எப்போது? - முதலமைச்சர் கொடுத்த விளக்கம் !

அடுத்த 6 பேர் விடுதலை எப்போது? - முதலமைச்சர் கொடுத்த விளக்கம் !

அடுத்த 6 பேர் விடுதலை எப்போது? - முதலமைச்சர் கொடுத்த விளக்கம் !
X

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் , நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அதனை முன்னுதாரணமாக கொண்டு மற்ற ஆறு பேரும் தங்களை விடுதலை செய்ய கோர முடியும் என கூறப்படுகிறது. எனவே. சிறையில் உள்ள மற்ற ஆறு பேர் எப்போது விடுதலையாவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

perarivalan

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் , பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது. எழுவர் விடுதலையில், கழக அரசு முனைப்போடு செயல்படும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் 494ஆவது வாக்குறுதியாக வழங்கப்பட்டிருக்கிறது.

மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில், மாநிலத்தினுடைய உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மாநில அரசினுடைய கொள்கையில், அதனுடைய முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதியரசர்கள் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இது மிகமிக முக்கியமான ஒன்று.

perarivalan

32 ஆண்டுகால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்திருக்கக்கூடிய அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அந்த பேரறிவாளனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், வரவேற்பையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தன்னுடைய மகனுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை செல்ல முடியுமோ, அந்த எல்லை வரை சென்று போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையினுடைய இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.

தாமதமாக கிடைத்திருந்தாலும், ஒரு மிக முக்கியமான வரலாற்றை பெறக்கூடிய வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. மனித உரிமைகள் மட்டுமல்ல, மாநில உரிமைகளும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது, என்றார்.

perarivalan

அப்போது, மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன என்று முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சட்ட வல்லுநர்களோடு நாங்கள் கலந்துபேசி, வழக்கறிஞர்களோடு கலந்துபேசி அதற்குப் பிறகு அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும், என்றார்.

newstm.in

Next Story
Share it