நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்? நடிகர் வையாபுரி புதிய விளக்கம் !!
நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்? நடிகர் வையாபுரி புதிய விளக்கம் !!

ஒட்டுமொத்த திரையுலகையும் தமிழ் மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது நடிகர் விவேக் மரணம். தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர். மேலும் படங்களில் நடிப்பதோடு மரக்கன்றுகளை நட்டு வைத்து பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வந்தார்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுக்க அதில் மாட்டி நடிகர் விவேக் தொற்றால் பாதிக்கப்பட்டார். முன்னதாக தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு தயக்கம் இருந்தது. தடுப்பூசி போட்டால் உயிர் போய்விடுமோ என்கிற பயம் சிலருக்கு. இதை எல்லாம் பார்த்த விவேக் தடுப்பூசி விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.

அதன்னபடி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக். மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் தடுப்பூசி போட்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவர் தடுப்பூசி போட்டதால் தான் உயிரிழந்தாரா என்ற பரபரப்பு நிலவியது. எனினும் இதனை மருத்துவர்கள் மறுத்தனர்.
இதனிடையே, விவேக் ஏன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்று நடிகர் வையாபுரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக இருக்கும் பயத்தையும் போக்கவே விவேக் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஆனால், விவேக் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பி செய்த காரியம் வேறு மாதிரி ஆகிவிட்டது என அவர் உருக்கத்துடன் கூறினார்.
newstm.in

