கல்யாணமான 2 மாசத்துல கள்ளக்காதலனுடன் தப்பியோடிய மனைவி!! 7 வருடங்களுக்கு பின்னர் வசமாக சிக்கினார்!!

ஒடிசாவின் பத்குரா பகுதியில் வசித்து வருபவர் அபய சுடர். இவருக்கும்,மொகரனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 7ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமாகி 2 மாதங்கள் கழித்து இதிஸ்ரீ திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களிலும் தேடியும் மனைவியை கணவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதே சமயம்,

கல்யாணமான 2 மாசத்துல கள்ளக்காதலனுடன் தப்பியோடிய மனைவி!! 7 வருடங்களுக்கு பின்னர் வசமாக சிக்கினார்!!
X

ஒடிசாவின் பத்குரா பகுதியில் வசித்து வருபவர் அபய சுடர். இவருக்கும்,மொகரனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 7ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமாகி 2 மாதங்கள் கழித்து இதிஸ்ரீ திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களிலும் தேடியும் மனைவியை கணவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதே சமயம், மகளைக் காணவில்லை என்று இதிஸ்ரீயின் தந்தையும், வரதட்சனைக் கேட்டு கணவர் துன்புறுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கல்யாணமான 2 மாசத்துல கள்ளக்காதலனுடன் தப்பியோடிய மனைவி!! 7 வருடங்களுக்கு பின்னர் வசமாக சிக்கினார்!!

மேலும், தனது மகளை அபய சுடர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அபய சுடரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். பின்னர், ஒரு மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்த அபய சுடர், தனது மனைவியை கண்டுப்பிடித்து, தான் நிரபராதி என நிரூபிக்க முடிவு செய்து முயற்சியில் ஈடுபட்டார்.

தனது மனைவிக்கு வேறு யாருடனோ தொடர்பிருக்கலாம் என்று சந்தேகித்த அபய சுடர், பல இடங்களில் மனைவியைத் தேடி, இறுதியில், தனது மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு, வேறொருவருடன் குடும்பம் நடத்தி வருவதைக் கண்டுப்பிடித்தார். அதன் பின்னர், இது குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

கல்யாணமான 2 மாசத்துல கள்ளக்காதலனுடன் தப்பியோடிய மனைவி!! 7 வருடங்களுக்கு பின்னர் வசமாக சிக்கினார்!!

அபய சுடர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் இதிஸ்ரீ மற்றும் அவரது கள்ளக் காதலர் ராஜீவ்வையும் கைது செய்தனர். இதிஸ்ரீ அளித்த வாக்குமூலத்தில், தனக்கு திருமணத்திற்கு முன்பே ராஜீவ்வுடன் தொடர்பு இருந்ததாகவும், தனது காதலை பெற்றோர் ஏற்க மறுத்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

திருமணம் முடிந்த 2 மாதங்களுக்கு பின் தப்பியோடிய இதிஸ்ரீ அதன் பின்னர் 7 வருடங்களாக தனது முன்னாள் காதலனுடன் வசித்து வந்து, இரு குழந்தைகளையும் பெற்றெடுத்தது அவரது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது.

newstm.in

Tags:
Next Story
Share it