கத்திமுனையில் இளம்பெண் கடத்தி கற்பழிப்பு!!
சுங்கச்சாவடியில் உள்ள கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு கொடூரம்! கத்தி முனையில் கடத்தி கற்பழிப்பு

பஞ்சாபில் லூதியானாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன், உறவினரை அழைத்துவர கர்னாலில் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் காத்திருந்த அப்பெண் சுங்கச்சாவடியில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். கணவர் அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார். இதனிடையே கழிவறை அருகே நின்று கொண்டிருந்த இருவர் கத்திமுனையில் அப்பெண்ணை பின்பக்கமாக கடத்திச் சென்றனர்.
பின்னர் சுங்கச்சாவடியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் வைத்து அப்பெண்ணை இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். அனைத்தையும் முடித்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். காயத்துடனும், சோர்வுடனும் வந்த அப்பெண் நடந்தது குறித்து தனது கணவரிடம் கூறினார்.
இதனையடுத்து அத்தம்பதி அளித்த புகாரையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரையும் தேடி வருகின்றனர்.
newstm.in