யெஸ் வங்கி மோசடி! 7 இடங்களில் அதிரடி சோதனை!! கோடிக்கணக்கில் பண மோசடி!!
யெஸ் வங்கி மோசடி! 7 இடங்களில் அதிரடி சோதனை!! கோடிக்கணக்கில் பண மோசடி!!

யெஸ் வங்கி மோசடி தொடர்பாக ராணா கபூர் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என்று இன்று 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ எல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்கும் மேல் கடன் கொடுத்துள்ளது. யெஸ் வங்கி கடன் தொகை கொடுத்திருக்கும் நிறுவனங்களில் பல நிறுவனங்கள் இன்று திவால் ஆகும் நிலையில் இருக்கின்றன. கடன் தொகை திரும்ப வராததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துக் கொண்டது.
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த வெள்ளியன்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராணா கபூர் தகுதியில்லாத பல நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ராணா கபூரின் மகளும் தடுத்து நிறுத்தப்பட்டார். ராணா கபூரின் மனைவி பிந்து, மகள்கள் ராகி கபூர் டான்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும் இந்த சட்டவிரோதமான பணம் பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவினர் சந்தேகப்படுகின்றனர். இந்நிலையில் இன்று மும்பையில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
newstm.in