இனி எந்த நாட்டுக்கும் விமானத்தில் பறக்கலாம்.. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !!
இனி எந்த நாட்டுக்கும் விமானத்தில் பறக்கலாம்.. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !!

சர்வதேச விமான சேவை மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
எனினும், வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே, ஒமைக்ரான் கொரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை, மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதை அடுத்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி முதல், சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக இன்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. சர்வதேச பயணத்திற்கான சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

