இளைஞர் உயிரோடு புதைப்பு.. காணவில்லை என புகார் கொடுத்த தம்பி பகீர் வாக்குமூலம் !!
இளைஞர் உயிரோடு புதைப்பு.. காணவில்லை என புகார் கொடுத்த தம்பி பகீர் வாக்குமூலம் !!

மூத்த சகோதரனை உயிருடன் புதைத்துவிட்டு காணவில்லையென காவல்துறையில் புகார் அளித்த தம்பி சிக்கியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞரான மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குடித்துவிட்டு பாபு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் குடும்பத்தில் தகராறு உண்டானதால் அவரை குடும்ப உறுப்பினர்களே தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சண்டைக்கு பிறகு பாபு மாயமாகியுள்ளார். இதனால் குடும்ப தகராறு காரணமாக பாபு வெளியேறிவிட்டார் என அக்கம்பக்கத்தினர், உறவினர்களை நம்பவைத்தனர். மேலும் தனது அண்ணன் காணவில்லை என அவரது தம்பி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பாபு மாயமானதில் அவரது தம்மி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது, அண்ணன் பாபு குடித்துவிட்டு தினமும் தகராறு செய்வதால் அவரை கொலை செய்ய தம்பி சாபு திட்டமிட்டு வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணனை சாபு தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தம்பி சாபு, அவரது உடலை இழுத்துச் சென்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்து உறவினர்களிடம் அண்ணன், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என நம்பவைத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பாபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அண்ணனைக் கொலை செய்த தம்பி சாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

