சிங்கப்பெண்ணே.. சீண்ட வந்த 6 ஆண்களை துவம்சம் செய்த இளம்பெண் - வீடியோ !!

சிங்கப்பெண்ணே.. சீண்ட வந்த 6 ஆண்களை துவம்சம் செய்த இளம்பெண் - வீடியோ !!

சிங்கப்பெண்ணே.. சீண்ட வந்த 6 ஆண்களை துவம்சம் செய்த இளம்பெண் - வீடியோ !!
X

பெண்களுக்கு தற்காப்பு கலை எவ்வளது அவசியம் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி. வீடியோவை பார்த்தாலே உங்களுக்கு அது புரியும். அதேநேரத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய ஆண்கள் தான் அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.

இந்த நிலையில், ஆள்நடமாற்ற தெருவில் நடந்து வந்த பெண்ணை 6 இளைஞர்கள் வழிமறைத்து சுற்றிவளைக்கின்றனர். பின்னர் அப்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள 6 ஆண்கள் முயல, அந்த பெண் தனியாளாக நின்று அந்த ஆறு பேரையும் அடிச்சு துவம்சம் செய்த சிசிடிவி காட்சி ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

girl

ஒரு பெண் தெருவில் தனியாக நடந்து வருகிறாள். அவளை வழிமறித்து 6 ஆண்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். அவள் 6 ஆண்களையும் ஒவ்வொருவராக தன் கால்களால் உதைத்து கீழே தள்ளுகிறாள். சில தற்காப்பு கலைகளை பயன்படுத்துகிறாள். 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை ட்விட்டரில் ‘TheFigen’ என்ற கணக்கு பதிவிட்டுள்ளனர். வைரலான இந்த வீடியோ இதுவரை 3.5 மில்லியன் பார்வைகளையும், 9000க்கும் அதிகமான ஷேர்களையும் பெற்றுள்ளது.

குற்றவாளிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. சமீபத்தில் ஒரு துணிச்சலான பெண் தன்னை துன்புறுத்திய, அச்சுறுத்திய 6 ஆண்களை வீழ்த்திய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் அவரது துணிச்சலையும் வலிமையையும் கண்டு வியந்தனர். அதே நேரத்தில் பெண்கள் அன்றாடம் இவ்வளவு கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று பலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.


newstm.in

Tags:
Next Story
Share it