Theme Check

தமிழ்த்தாய் வாழ்த்து.. தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு..!

தமிழ்த்தாய் வாழ்த்து.. தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு..!

தமிழ்த்தாய் வாழ்த்து.. தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு..!
X

தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த…’ எனும் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tamilnadu govt announces new state song | தமிழக அரசின் மாநிலப் பாடலாக 'தமிழ்த்தாய்  வாழ்த்து' அறிவிப்பு | Tamil Nadu News in Tamil
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it