35 வயது நபருடன் 12 வயது சிறுமிக்கு திருமணம்.. 7 மாதங்களுக்கு பிறகு சிக்கிய தாய்!!

35 வயது நபருடன் 12 வயது சிறுமிக்கு திருமணம்.. 7 மாதங்களுக்கு பிறகு உறவினர்களுடன் சிக்கிய தாய்!!

Update: 2020-02-20 18:04 GMT

ஓமலூர் அருகே 12 வயது சிறுமியைக் கட்டாயத் திருமணம் செய்த நபரையும், சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியில் வசித்து வருகின்றனர் பால்ராஜ் - ரத்தினம் தம்பதி. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் ரத்தினம், தனது அண்ணன் மகனான செந்தில்குமாருக்கு(35), மகளைக் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்திற்கு செந்தில்குமாரின் சகோதரர்கள் பாபு, திருமுருகன், மதி ஆகியோரும், அவர்களது மனைவிகளான கமலா, மணிமேகலை, மஞ்சு ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

எனினும் சிறுமியின் தந்தை பால்ராஜ்  எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், திருமணம் முடிந்த நிலையில் மனஉளைச்சல் அடைந்த சிறுமியின் தந்தை பால்ராஜ் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை மீட்டு தந்தை பால்ராஜிடம் ஒப்படைத்தனர். மேலும், திருமணம் செய்த செந்தில்குமார், சிறுமியின் தாய் ரத்தினம், மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் போலீசார் செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில் 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான செந்தில்குமார் மற்றும் சிறுமியின் தாய் ரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வேறொரு வழக்கு விசாரணையின் போது கைது செய்ததாக கூறும் போலீசார் அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:    

Similar News