கர்நாடகாவில் கோர விபத்து - 9 தமிழர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!!

கர்நாடகாவில் கோர விபத்து - 9 தமிழர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!!;

Update: 2020-03-06 14:23 GMT

கர்நாடகா மாநிலம் குனிக்கல்லில் 2 கார்கள் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
ஓசூரைச் சேர்ந்த 9 பேர் தர்மஸ்தலா கோவிக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். குனிக்கல் பகுதியில் அவர்கள் காரும் வரும்போது எதிர்திசையில் வந்த மற்றொரு காருடன் விபத்தில் சிக்கியது.

இன்று காலை இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு கார்கள் வேகமாக மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு கார்களின் ஒரு பகுதி அப்பளம் போல் நொருங்கியது. மேலும் இந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.  

newstm.in

Tags:    

Similar News