கணவன் தொல்லை இல்லை.. 14 வயது கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. 30 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
கணவன் தொல்லை இல்லை.. 14 வயது கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. 30 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
உல்லாசமாக இருக்க அழைத்து வராததால் திருமணமான பெண்ணை 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் தாதியா - ஷீலா தேவி தம்பதியர், தங்களது 2 மகன்கள், ஒரு மகளுடன் திருப்பூரில் வசித்தனர். குடும்பத்துடன் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இதற்கிடையே கடந்த பொங்கல் பண்டிகையின் போது குடும்ப தகராறு காரணமாக மிதுன் தாதியா தனது குழந்தைகள் 3 பேரையும் அழைத்துக்கொண்டு பீகார் சென்று விட்டார். ஆனால் ஷீலா கணவருடன் செல்லாமல் அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் ஷீலா தேவி தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷீலா தேவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஷீலா தேவிக்கும், பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.
கணவன் மிதுன்தாதியா வேலைக்கு சென்ற பிறகு, வீட்டிற்கு வரும் சிறுவனுடன் ஷீலா தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஏற்பட்ட தகராறு காரணமாக ஷீலாவின் கணவர் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது. கணவர் ஊருக்கு சென்றதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஷீலா தேவி, சிறுவனுடன் அடிக்கடி தனிமையிலிருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் ஷீலா தேவி வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து ஷீலா தேவியுடன் தொடர்பிலிருந்த அந்த சிறுவனைப் பிடித்த போலீசார் விசாரித்தப்போது அதிர்ச்சி காத்திருந்தது. ஷீலாவின் கணவன் வேலைக்குச் சென்றதும், அவரை பார்க்கச் செல்லும் அவன் ஷீலாவுடன் தனிமையிலிருந்து வந்துள்ளான்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஷீலா தேவியின் வீட்டிற்கு சென்ற சிறுவன் அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளான். ஆனால் அவர் இன்று முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் ஷீலா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக போலீசார் கூறுகின்றனர்.ள்ளான். இதனைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
newstm.in