தமிழகத்தில் 1,430 கோடியில் புது திட்டம்! முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் 1,430 கோடியில் புது திட்டம்! முதல்வர் அறிவிப்பு!

Update: 2020-01-30 00:27 GMT

தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் என ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளில் அமைக்க ஏற்கனவே அனுமதியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அடுத்து நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளுர், மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், மேலும் நான்கு மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. கடலூர், காஞ்சிபுரம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அரியலூர் மற்றும் கள்ளகுறிச்சி மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து, தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசின் பங்காக ரூ1,430 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

newstm.in

Tags:    

Similar News