வரும் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு.. அரசு அதிரடி உத்தரவு..!

வரும் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு.. அரசு அதிரடி உத்தரவு..!

Update: 2022-03-15 12:56 GMT

ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஹிஜாப், இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை.

அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. எனவே, ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும்’ என கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், பெங்களூருவில் இன்றுமுதல் வரும் 21-ம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியதாவது; “ஹிஜாப் விவகார வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர் முழுவதும் வரும் 21-ம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ அனுமதி கிடையாது. பாதுகாப்பு பணியில் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை உள்பட 10 ஆயிரம் போலீசார் ஈடுபட இருக்கிறார்கள்.

பெங்களூரு நகர மக்கள் இதுவரை போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளனர். ஹிஜாப் விவகார வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பும் பெங்களூரு மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News