தமிழகத்தில் இனி வாரத்தில் 2 நாட்கள்..?: வெளியானது பரபரப்பு தகவல்..!

தமிழகத்தில் இனி வாரத்தில் 2 நாட்கள்..?: வெளியானது பரபரப்பு தகவல்..!

Update: 2022-01-19 12:15 GMT

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பானது பல ஆயிரங்களை கடந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு முடக்கம் ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு 10 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் தினசரி நோய் தொற்று பாதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் அறியப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் தங்களது தொழில்களுக்கு செல்ல இருப்பதால் தமிழகத்தில் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதை தவிர இரவு நேர ஊரடங்கில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் இருப்பதை கண்காணித்த அரசு, பேருந்து போக்குவரத்து சேவையை நிறுத்த வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கை சனிக்கிழமைகளிலும் செயல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், ஊரடங்கு குறித்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News