மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு..!!இது தமிழகத்திற்கு அல்ல கேரளாவில்

மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு..!!இது தமிழகத்திற்கு அல்ல கேரளாவில்

Update: 2021-07-29 12:32 GMT

கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. 

இந்நிலையில், கேரளாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை.  தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News