ஜார்கண்ட் மாநிலம் ஹசாரியாக் அருகே பட்மா ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதில் ராணுவ ஜவான்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் உருவானதாக கூறப்படுகிறது.

இதனை சாப்பிட்டு 40 க்கும் மேற்பட்ட ஜவான்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஹசரியாக் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Tags: