காடுகளை அதிகரிக்க 48,000 கோடி நிதி! மத்திய அமைச்சர் தகவல்!
காடுகளை அதிகரிக்க 48,000 கோடி நிதி! மத்திய அமைச்சர் தகவல்!
பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தில் பதில் அளித்து பேசிய மத்திய சுற்றுச் சுழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதுப்பிக்க கூடிய எரிசக்தி, வாகன புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை குறைப்பது, காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பது உட்பட, பாரிஸ் ஒப்பந்தத்தையும் உறுதி மொழிகளையும் இந்தியா மட்டுமே சரியாக கடைப்பிடித்து வருகிறது.
இந்தியாவில் மரங்கள் உள்ள நிலப் பரப்பு,15 ஆயிரம் சதுர கி.மீ., அதிகரித்துள்ளது. காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக, மாநில அரசுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காடுகளின் பரப்பை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.