5 ரூபாய்க்காக ஒருவர் அடித்துக்கொலை!! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!
5 ரூபாய்க்காக ஒருவர் அடித்துக் கொலை!! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!;
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பல்கார் மாவட்டத்தின் நலஸ்போரா பகுதியில் வசிப்பவர் ராம்துலர் சிங் யாதவ் (68). இவர் பணி முடிந்து வீடு நோக்கி சென்றபோது போரிவல்லி கிழக்குப் பகுதியில் உள்ள மகதானே கியாஸ் நிலையத்தில் தன் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்துள்ளார். நிரப்பிய பிறகு அதற்கான தொகையை கொடுத்த ராம்துலர் சிங் மீதி 5 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் சில்லறை இல்லை என கியாஸ் நிலைய ஊழியர் கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த 5 பேர் அவரைச் சூழ்ந்து நின்று கடும் தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராம்துலர் சிங் கடும் துயரத்திலும் மனவேதனையிலும் இருந்தார். இதனையடுத்து அவர் வீட்டில் உயிரிழந்தார்.
அவரது மகன் அளித்த புகாரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். வெறும் 5 ரூபாய்தான் காரணமா அல்லது முன்பகை எதுவும் காரணமா வேறு விவகாரமா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
newstm.in