திடீர் தீ விபத்தில் 6 சொகுசு பேருந்துகள் எரிந்து நாசம்!!
பழுது பார்க்கும் நிலையத்தில் தீவிபத்து.. 6-க்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துகள் எரிந்து சேதம்....!
செங்கல்பட்டு அருகே தனியார் பேருந்து பழுது பார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6க்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துகள் எரிந்து நாசமாகின. வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து பழுதுபார்க்கும் நிலையம் உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த பேருந்துகளுக்கு தீ பரவியது. இதில் 6க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகின.
newstm.in