தனியார் நிறுவனங்களில் 75% உள்ளூர் மக்களுக்கே வேலை வாய்ப்பு: அரசு அதிரடி அறிவிப்பு..!!
தனியார் நிறுவனங்களில் 75% உள்ளூர் மக்களுக்கே வேலை வாய்ப்பு: அரசு அதிரடி அறிவிப்பு..!!
அரியானாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2022 ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் மூலம் அம்மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் வேலை பெற உத்தரவாதம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக 50 ஆயிரம் மாத சம்பளம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80 சதவீத பணிகளும், ராஜஸ்தானில் 75 சதவீத பணிகளும், ஆந்திரா 75 சதவீத பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70 சதவீத பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.