இவர்களுக்கு 9 மாதம் விடுப்பு.. அமைச்சர் அறிவிப்பு..!
இவர்களுக்கு 9 மாதம் விடுப்பு.. அமைச்சர் அறிவிப்பு..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் வாசித்தார்.
அப்போது, “மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெற்று பராமரிக்கும் அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 9 மாதம் விடுப்பு வழங்கப்படும்.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.