திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புதுமண தம்பதி வெட்டிக்கொலை !

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புதுமண தம்பதி வெட்டிக்கொலை !;

Update: 2022-07-25 19:14 GMT

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (28). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது மாமா முத்துக்குட்டி என்பவர் மகள் ரேஷ்மாவை(20) காதலித்து உள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இவர்கள் காதலுக்கு இளம்பெண் ரேஷ்மா வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும் ஒரு மாதத்திற்கு முன்பு மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஊரில் இருந்து வெளியேறி வெளியூரில் தங்கி இருந்த இருவரும் சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் வீட்டிலிருந்த தம்பதி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து  போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்ணின் வீட்டார் கொலை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
newstm.in

Similar News