உச்சத்தை தொடும் ஏசி விலை... காரணம் என்ன தெரியுமா?
உச்சத்தை தொடும் ஏசி விலை... காரணம் என்ன தெரியுமா?
இன்று முதல் ஏசி விலை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று முதல் ஏசிகளுக்கான எனர்ஜி ரேட்டிங் விதி மாற்றி அமைக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. புதிய தரநிலை ஜனவரி 2022 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், உற்பத்தியாளரின் வேண்டுகோளின் பேரில், அரசு ஆறு மாத கால அவகாசம் வழங்கியது. தற்போது, அந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக ஏசிக்களின் விலைகள் உயரும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய ஆற்றல் திறன் மதிப்பீட்டு விதிமுறைகளின்படி தற்போதைய ஏர் கண்டிஷனரின் ஆற்றல் மதிப்பீடு ஒரு நட்சத்திரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அதாவது ஜூலை 1ஆம் தேதி முதல் 5 நட்சத்திர ஏசியின் மதிப்பீடு 4 நட்சத்திர மதிப்பீடாக ஆக இருக்கும்.
இதன் காரணமாக 5 நட்சத்திர மதிப்பீடு இயந்திரங்களுக்கான வரைமுறை மேலும் வலுப்படுத்தப்படும். புதிய எரிசக்தி திறன் வழிகாட்டுதல்களின் விளைவாக, இந்தியாவில் ஏசியின் விலை 7 முதல் 10 விழுக்காடு வரை உயர வாய்ப்பு உள்ளது.
newstm.in