கணவர் ஹேம்நாத் சித்ரவதையால் தான் நடிகை சித்ரா தற்கொலை.. பரபரப்பு தகவல்கள் !!
கணவர் ஹேம்நாத் சித்ரவதையால் தான் நடிகை சித்ரா தற்கொலை.. பரபரப்பு தகவல்கள் !!
விஜே சித்ராவை ஹேம்நாத் பல கொடுமைகள் செய்துள்ளதாக அவரது நண்பர்கள் சிலர் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தை விசாரித்த ஆர்.டி.ஓ, சித்ரா மரணத்தில் வரதட்சணை கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்தது.
தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில் இருந்து வந்த ஹேம்நாத் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹேம்நாத்துக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்பிறகு இந்த வழக்கில் அவ்வப்போது திருப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வரும் நிலையில், ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சித்ராவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது எனக் கோரி எதிர் மனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின் போது, ஹேம்நாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சித்ராவை தற்கொலை செய்து கொள்ளுமாறு ஹேம்நாத் வற்புறுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டார். அத்துடன், சித்ராவை தனது நடிப்புத் தொழிலை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தவில்லை என்றும் அவரது நடத்தையை சந்தேகிக்கவில்லை என்றும் வாதிட்டார். இந்த வாதத்திற்கு பின்னரே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆனால், தங்களது மகளின் மரணத்துக்கு முழுக்க, முழுக்க ஹேம்நாத்துதான் காரணம் என சித்ராவின் பெற்றோர் இதுவரை குற்றம்சாட்டி வருகின்றனர். அதே சமயம், சித்ராவின் மரணத்தில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடைசி நாட்களில் சித்ராவுடன் இல்லற வாழ்க்கையில் இருந்த ஹேம்நாத் குற்றம்சாட்டுகிறார்.
மேலும், தனது மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தற்போது தனது உயிருக்குப் பிறகு இருப்பதாகவும் அவர் கூறினார். தான் உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் எனவும் கூறினார். ஆனால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டதாக தெரியவில்லை. காவல்துறையிலும் அந்த மர்ம நபர்கள் பெயரை ஹேம்நாத் கூறினாரா என்பதற்கான தகவலும் இல்லை.
ஹேம்நாத் சித்ராவை பல நாட்களாக சந்தேகப்பட்டு அடித்து தாக்கியுள்ளான், நெஞ்சில் அமர்ந்துகொண்டு கழுத்தை நெறிப்பான், கன்னங்களை கடித்து வைப்பான், பத்தினியா இருந்தா செத்துரு என்பான் என்று ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளனர். ஆனால், நீதிமன்றத்தில் ஹேம்நாத் தரப்பின் வாதம் அதற்கு நேர் எதிராக உள்ளது. நீதிமன்றமும் குற்றப்பத்திரிகைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த உத்தரவின்போது சித்ராவின் தந்தை பதிலளிக்க கால அவகாசம் அளித்தது நீதிமன்றம். இந்த வழக்கு மீன்டும் விசாரணைக்கு வந்தபோது, கணவர் ஹேம்நாத் உடல், மனரீதியாக செய்த சித்ரவதை காரணமாகவே மகள் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என டிவி நடிகை சித்ரா தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளார்.
newstm.in