அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Update: 2022-02-08 07:17 GMT

இந்த ஆண்டு ஐபிஎல் 15ஆவது சீசன் முதல் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது.

சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட லக்னோ அணி, கே.எல்.ராகுலை கேப்டனாக தக்கவைத்துள்ளதாக தெரிவித்தது. மேலும், ரவி பிஷ்னோய், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரையும் வாங்கியுள்ளதாக தெரிவித்தது. அணிக்கு, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தது

இந்நிலையில் அகமதாபாத் அணி, தங்களது அணிக்கு அகமதாபாத் டைடன்ஸ் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பெயர் ப்ரோ கபடி லீக் தொடரில் இடம்பெற்றுள்ள தெலுங்கு டைடன்ஸ் பெயருடன் ஒத்துப்போவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

இருப்பினும், பெரும்பாலானோர் இந்த பெயருக்கு வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். இந்த அணி ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக தக்கவைத்துள்ளது. மேலும், ரஷித் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரை தக்கவைத்துள்ளது.ஐபிஎல் மெகா ஏலம் வரும் 12,13ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News