மும்பை அணி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு… சாஹலை தொடர்ந்து உத்தப்பா!!
மும்பை அணி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு… சாஹலை தொடர்ந்து உத்தப்பா!!
மும்பை அணி நிர்வாகம் மீது சென்னை அணி வீரர் ராபின் உத்தப்பா குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அணிகள் மாறுவதற்கான காரணம் குறித்து கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ராபின் உத்தப்பா மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், 2008இல் மும்பை அணிக்காகத்தான் நான் முதலில் விளையாடினேன். பிறகு அடுத்த தொடரில் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களில் நானும் ஒருவன். அப்போது எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது.
என்னை அணியில் இருந்து மாற்றுவதற்கான கடிதத்தில் மும்பை அணியின் நிர்வாகத்தினர் கையெழுத்திட வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்து இட மறுத்தேன்.
அப்போது அவர்கள் உங்களுக்கு மும்பை அணியில் இனி விளையாட வாய்ப்பு கொடுக்க முடியாது. நீங்கள் வேறு அணிக்கு மாறலாம் என பகிரங்கமாகவே கூறினர்.
பிறகு அடுத்த தொடரில் RCB அணிக்காக விளையாடினேன். அந்த தொடரில் நான் மன அழுத்தத்தில் இருந்ததால் சிறப்பான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யுஷ்வேந்திர சாஹல் மும்பை அணி வீரர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், சென்னை வீரர் ராபின் உத்தப்பாவும் மும்பை அணியின் நிர்வாகத்தின் மீது புகார் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in