டாஸ்மாக் கடையில் தகராறு.. போலீஸ்க்கு கத்திக்குத்து

டாஸ்மாக் கடையில் தகராறு.. போலீஸ்க்கு கத்திக்குத்து;

Update: 2022-07-26 20:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அடுத்த ஆற்றூர் சந்திப்பில் இருந்து குட்டகுழி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையையொட்டியுள்ள பாரில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த பிரேஸ்லி ரெனி உள்பட பலரும் மது அருந்தினர்.

இதில் ரென் அருகில் வேர்க கிளம்பி பகுதியை சேர்ந்த விஜி என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்ததால் சிறிது நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். பின்னர் இருவரும் மதுபான கடையிலிருந்து வெளியே வந்து சாலையிலும் தாக்கிக் கொண்டனர்.

இதனிடைய, பிரஸ்லி ரெனி தனது நண்பரான உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரை அழைத்துள்ளார். இதை அடுத்து மதியழகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார் அப்போது அங்கு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்ததும் மோதலை தடுக்க முயன்றுள்ளார். 

அப்போது  விஜி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதியழகனை சாரமாறியாக குத்தியுள்ளார். மேலும் பிரஸ்லி ரெனிக்கும் உடம்பில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதையடுத்து காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உள்ளனர்.
  


இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் பணிபுரியும் நபர் மோதலை தடுக்காமல் மற்றொருவரை தாக்கச்சென்றது குறித்தும் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. 

newstm.in

Similar News