5 வயதில் ரூ.62 லட்ச சம்பளத்தில் வேலை... ஸ்வீட் சாப்பிடு சம்பளத்த வாங்கு !
5 வயதில் ரூ.62 லட்ச சம்பளத்தில் வேலை... ஸ்வீட் சாப்பிடு சம்பளத்த வாங்கு !;
ஐந்து வயது குழந்தை ஆண்டுக்கு 62 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என ஸ்வீட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் சாப்பிட்டால் மட்டும் போதும்.
கனடாவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனம் தங்களது தயாரிப்புகளை சுவைப்பதற்காக 62 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரம் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வேலையில் சேர பலர் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
கனடாவை சேர்ந்த கேண்டி ஃபன்ஹவுஸ் (Candy Funhouse) என்ற ஸ்வீட் நிறுவனம் தலைமை ஸ்வீட் அதிகாரி என்ற பதவிக்கு விண்ணப்பம் செய்ய விளம்பரம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை ஸ்வீட் அதிகாரிக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கனடிய டாலர் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் இந்திய ரூபாயில் 62 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஸ்வீட் அதிகாரியின் வேலை என்பது இந்நிறுவனம் தயாரிக்கும் ஸ்வீட்களை சுவைத்து பார்த்து அதில் உள்ள நிறை குறைகளை நிறுவனத்திற்கு கூறவேண்டும். ஜாலியான வேலைதான் என்றாலும் ஸ்வீட் சாப்பிடுவதில் மிகவும் ஆர்வம், ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
இந்த வேலையில் சேர்வதற்கு 5 வயது பூர்த்தி செய்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஸ்வீட் மீது மிகவும் ஆர்வம் மற்றும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதும் அவர் கூறும் பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்நிறுவனம் ஸ்வீட்டின் தரத்தை மாற்றி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலையில் சேர ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களை ஏன் வேலைக்கு எடுக்கின்றோம் என்பது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜமால் ஹெஜாசி கூறும்போது, ஸ்வீட் மீதான காதல் எந்த வயதிலும் இருக்கும். 5 முதல் 50 வயது வரை உள்ள அனைவருக்குமே ஸ்வீட் பிடிக்கும் என்பதாலும் இந்த வேலைக்கு 5 வயது பூர்த்தி செய்தால் போதும் என்ற நிபந்தனையை வைத்திருக்கின்றோம் என்றார்.
ஸ்வீட்டை சாப்பிடவுடன் ஏற்படும் கற்பனை மற்றும் தைரியமாக கருத்து சொல்லுதல் ஆகிய இரண்டு குணங்கள் இருந்தால் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
newstm.in