ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… கார்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… கார்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?
ரேஷன் கார்டில் உணவு தானியங்களை வாங்கவில்லை என்றால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அப்படி உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டிருந்தால், அதை மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால், கடந்த பல மாதங்களாக ரேஷன் கார்டுகளில் உணவு தானியங்களை வாங்காமல் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டிருக்கலாம்.
விதிமுறைகளின்படி ஆறு மாதங்களாக ரேஷன் கார்டில் உணவு தானியங்கள் வாங்கவில்லை என்றால், அவருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்கத் தகுதியற்றவர் என்று அர்த்தம்
மாதந்தோறும் வழங்கப்படும் இந்த வசதியை பலர் பயன்படுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆறு மாதங்களுக்கு மேலாக உணவு தானியங்கள் எடுக்காதவரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
இந்த காரணத்தால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டிருந்தால், அதை நீங்கள் மீண்டும் செயல்படுத்தலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்குச் செல்லவும்.
இப்போது ' Ration Card Correction’ விருப்பத்தில் கிளிக் செய்யவும்.
ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் உங்கள் ரேஷன் எண்ணைக் கண்டறிய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
இப்போது உங்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம்.
அதன் பிறகு விண்ணப்பத்தை PDS, அதாவது பொது விநியோக அமைப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் ரேஷன் கார்டை செயல்படுத்துவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டால், ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.
newstm.in