மக்களே கவனம்.. இனி முகக்கவசம் கட்டாயம்.. மீறினால் ரூ.500 அபராதம்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

மக்களே கவனம்.. இனி முகக்கவசம் கட்டாயம்.. மீறினால் ரூ.500 அபராதம்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

Update: 2022-06-24 19:07 GMT

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரிய வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மீறுவோரிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News