#BIG NEWS:- இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை...காலையில் பாசிட்டிவ்... மாலையில் நெகட்டிவ்..?

#BIG NEWS:- இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை...காலையில் பாசிட்டிவ்... மாலையில் நெகட்டிவ்..?;

Update: 2022-07-19 16:08 GMT

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் மணிரத்னம்.மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவருடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்காக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக முயற்சித்தும் தற்போது தான் ஒரு வழியாக இந்த ஆண்டு இப்படத்தை இயக்கி முடிக்கவும் செய்தார். 

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப். 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில், மணிரத்னம் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.  

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, லால் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.இதனால் இவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் விரைவில் இவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்ளை சமூக வலைத்தளம் மூலம் கூறி வந்தனர்.

ஆனால் இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில்,  சற்று முன் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தற்போது கூறப்படுகிறது. எனவே தற்போது காய்ச்சல் மற்றும் உடல் சோர்வுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் மணிரத்னம் தனது வழக்கமான வேலைகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News